வளர்ச்சி திட்டப் பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2023-12-21 08:19 GMT
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி மற்றும் அச்சரப்பாக்கம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ரூபாய் ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் அவர்கள் ஆய்வு செய்து பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் இரண்டு கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மழை நீர் வெளியேறும் கால்வாய் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தசரதன், நந்தினிகரிகாலன், பேரூர் செயலாளர்கள் எழிலரசன், சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் அருள்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News