”இந்த ரோடு போட்ட கைக்கு விருந்து படைக்கலாம்..!”

தரமற்ற சாலையால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள்.

Update: 2024-03-06 16:45 GMT

தரமற்ற சாலையால் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சியில் அதிகாரிகள் ஆதரவுடன் மலை கிராம மக்களுக்காக சிறப்பு திட்டத்தின் ஒதுக்கப்பட்ட நிதியில் சாலை அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ரோடு வேண்டும், ரோடு வேண்டும் என கேட்டே பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அல்வா கொடுத்து விட்டதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியபோது, ”ஆண்டுகளாக சாலை கேட்டோம். ஒரு வழியாக அமைத்தனர். சாலை அமைக்கப்பட்ட சில நாட்களிலே பெயர்ந்து விழுந்தது. அமைக்கப்பட்ட தரமான அள்ளி கண்ணில் ஒத்தி கொள்ளலாம்.

இப்படி ஒரு சாலை மலை பகுதியில் மலை கிராம மக்களுக்காக யாரும் அமைக்க முடியாது. அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் இணைந்து செய்த சிறப்பான பணிக்கு விருதே வழங்கலாம் என பொதுமக்கள் நக்கல் அடிக்கின்றனர்.

Tags:    

Similar News