தேர்தல் பணி செய்யாத செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தேர்தல் பணி செய்யாத நாட்றம்பள்ளி செயல் அலுவலர் நந்தகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Update: 2024-03-18 08:57 GMT

காவல் நிலையம் 

 திருப்பத்தூர்மாவட்டம்,மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது ஓட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டர்மான தர்ப்பகராஜ் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை உள்ளிட்டவைகளை மேற்கொண்டார்.

அப்போது நேற்று நாட்றம்பள்ளி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கொடி கம்பங்கள் மற்றும் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றப்படாமல் இருந்தது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் அனுப்பப்பட்டு கொடிக்கம்பங்கள் மற்றும் அரசு சார்ந்த விளம்பரங்கள் முன்னாள் முதல்வர் இந்நாள் முதல்வர் உள்ளிட்ட படங்களை அகற்ற வேண்டும் என்று சுற்றி அறிக்கையை அனுப்பப்பட்ட பின்பும் நாட்றம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் எந்த பணியையும் செய்யாமல்,

இருந்த காரணத்தினால் அவர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் தர்ப்பகராஜ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News