விஷ ஜந்து கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு

துறையூர் அருகே சோபனாபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை விஷ ஜந்து கடித்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-06-25 05:27 GMT

பைல் படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனாபுரத்தைச் சேர்ந்தவர் 70 வயதான ஆறுமுகம். இவரது மனைவி 65 வயதான ராமாயி. இவர்கள் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை ஒத்திகைக்கு வாங்கி அங்கேயே தங்கி விவசாய பணிகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22 நிதி பணிகளை முடித்துவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அடையாளம் தெரியாத ஏதோ ஒரு விஷச் ஜந்து கடித்துவிட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகம் துறையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News