நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-28 15:37 GMT

 உறுதிமொழி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் விழிப்புணர்வு கோலப்போட்டி மற்றும் மெஹந்தி போட்டி நடைபெற்றது. பின்னர் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திட்ட இயக்குனர் முருகேசன் கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி திட்டச்சேரி மெயின் ரோடு வழியாக சென்று பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு முடிவடைந்தது.பேரணியில் உதவி திட்ட அலுவலர்கள் இந்திராணி,சரவணகுமார், சமுதாய அமைப்பாளர் சோனாராணி,பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ்,வரித்தண்டலர் மாதவன்,சமுதாய வள பயிற்றுனர் நாகதேவி மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News