ஆழ்வார்திருநகரியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-05-10 14:43 GMT

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி தட்டாப்பறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மந்திரமூர்த்தி (66) அவர்கள் நேற்று (09.05.2024) தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார்.

காவல்துறை தலைமை இயக்குநரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி,

தட்டாப்பறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசார் இன்று (10.05.2024) அன்னாரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News