இராசிபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள் விழா

இராசிபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-13 15:06 GMT

முன்னாள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வுமான பி. தங்கமணி அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி ஆர்.பட்டணம் பேரூராட்சியில் பேரூர் கழகச் செயலாளர், கே. பாலசுப்பிரமணியம், அவர்கள் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

அவரின் பிறந்தநாளையொட்டி பொது மக்களுக்கு, மகளிருக்கு, பேருந்து பயணிகளுக்கு என அனைவருக்கும் குளிர்பானங்கள், மற்றும் இனிப்பு லட்டு கள் வழங்கி பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக பொறுப்பாளர்களும், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News