இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் தாக்கிய சிறார் உட்பட நான்கு பேர் கைது

இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் தாக்கிய சிறார் உட்பட நான்கு பேர் கைது

Update: 2024-07-04 09:54 GMT

கைது

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா வாங்க பணம் கேட்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி பொதுமக்களை மிரட்டிய கும்பல். CCTV கட்சிகள் அடிப்படையில் 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது. மதுரையில் போதைப் பழக்கத்திற்கு ஆளான சில இளைஞர்கள் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனை தடுக்க மதுரை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சில இளைஞர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதோடு பொதுமக்களை தாக்கும் சம்பவமும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் மேலபாண்டியன் அகில் தெரு சாலையில் 4 இளைஞர்கள் நேற்று முன்தினம் போதையில் சுற்றிவருகின்றனர். அப்போது சாலையோரத்தில் பைக்கில் இளைஞர் ஒருவர் அமர்ந்து பேசி கொண்டிருந்தபோது திடிரென அங்கு வந்த போதை கும்பல் தாங்கள் இடுப்பில் மறைத்துவைத்திருந்த அரிவாள், கத்தியை எடுத்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டதுடன் அந்த இளைஞர் வீட்டிற்குள் விரைவாக சென்று கதவை அடைத்துகொள்ளும் போது திடிரென அந்த போதை கும்பலில் உள்ள ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கியுள்ளார். மேலும் நல்வாய்ப்பாக அந்த இளைஞர்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று தப்பினார். இந்த போதை கும்பல் அங்கு மட்டுமின்றி அதே பகுதியில் அடுத்தடுத்து பொதுமக்களை மிரட்டி சென்றதும், தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெற்குவாசல் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பலரும் அளித்த புகாரின் கீழ் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த கும்பல் தாக்கும் CCTV காட்சிகளும் வெளியானது. போலீசார் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை தெற்குவாசல் அருகே தில்லைநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் 3 சிறார்கள் உள்பட 4 பேர் என தெரிய வந்தது. மேலும், தெற்கு வாசல் காவல் துறையினர் அவர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதுரை மாநகரின் முக்கிய இடமான மீனாட்சியம்மன் கோவில் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நேற்றி முன்தினம் இரவு திடீரென புகுந்த மர்ம கும்பல் கஞ்சா வாங்குவதற்க்கு பணம் கேட்டு பொதுமக்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகார் அளிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றது.
Tags:    

Similar News