கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

Update: 2023-12-20 11:49 GMT

ஆயுள் தண்டனை

கடந்த 2019 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் அவ்வையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிமோகன் என்பவரது மனைவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணி மோகன் மற்றும் அவரது உறவினர்களான பூபதிராஜன் , நாகராஜ் ,சதீஷ்குமார் ஆகியோர் விஜயகுமாருக்கு பூச்சி மருந்து கொடுத்தும் இரு சக்கர வாகனத்தை கழுத்தில் ஏற்றியும், சுடு தண்ணியை மேலே ஊற்றியும் கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் ஈரோடு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரித்த நீதிபதி தயாநிதி குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிமோகன், நாகராஜ், பூபதி ராஜன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags:    

Similar News