பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-20 02:39 GMT

விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜீவாகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர்கள் லட்சுமணன், ராணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News