பணம் வைத்து சூதாட்டம் ; 3 பேர் கைது

இந்திரா நகரில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-09 02:26 GMT

சூதாட்டம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, அத்திப்பாளையம், இந்திரா நகர் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஜூன் 7-ம் தேதி மதியம் 3 மணி அளவில், அத்திப்பாளையம், இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது,அருகில் உள்ள காலனியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, புகலூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்கிற வெடிகுண்டு முருகேசன், தென்னிலை கரைப்பாளையம், செல்வி நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கரை பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.150-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News