ரூ. 1.19 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணி, மின்சார ரம்பத்தில் மறைத்திருந்த ரூ.1.19 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-25 03:58 GMT
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்து வருகின்றனர். இருந்தும் அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு ஆண் பயணி, மின்சார ரம்பம் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 1.666 கிலோ எடையுள்ள தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.1.19 கோடி என தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News