201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தினம் அன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-20 06:22 GMT

கிராம சபை கூட்டம் 

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடபடுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிலிருந்து பெறப்பட்ட கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கபடும் என்றும், இந்த கூட்டத்தில் சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News