மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் கையாடல் - ஒருவர் கைது

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் கையாடல் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-08 11:18 GMT
கைதானவர் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாகன உதவியாளராக இருந்தவர் வினோத் வில்பர்ட். இவர் கடந்த 2019 முதல் 2022 வரை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையில் ரூ.18.62 லட்சத்தை மோசடி செய்துள்ளார். அப்பணத்தை சிலரது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார். இதையடுத்து அவரை 2022-ல் பணிநீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 7-பேர் மீது வழக்கு பதிந்து வினோத் வில்பர்டை கைது செய்தனர்.

Tags:    

Similar News