வேலூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

வேலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ஆளில்லா விமானம் உள்ளிட்ட துரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 13:59 GMT

மாவட்ட ஆட்சியர் 

வேலூர் மாவட்டத்தில் கடந்த 19.04.2024 ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கருதி வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வருகின்ற 04.06.2024 ஆம் தேதி வாக்கு எண்ணிகை முடியும் வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News