நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் எம்எல்ஏ ஓ எஸ் மணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Update: 2024-04-26 08:58 GMT

நீர்மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் 

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் எம்எல்ஏ ஓ எஸ் மணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நாகையில் தற்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிற நிலையில் அதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நா

கை நகர அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நாகை அரசு மருத்துவமனை அருகில் நாகை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஏராளமானோருக்கு பழங்கள் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கினார்.

உடன் உடன் நாகை நகர செயலாளர் தங்க. கதிரவன் மாற்றம் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News