ஜெயலலிதா பிறந்தநாள்- ஓபிஎஸ் அணி கொண்டாட்டம்.

கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஓபிஎஸ் அணியினர் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Update: 2024-02-25 09:25 GMT

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 76 வது பிறந்தநாளை தமிழக முழுவதும் கட்சியினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் பேருந்து நிலையம் அருகே,அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில், மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லட்டுகள் வழங்கப்பட்டது. அப்போது, அப்பகுதியை கடந்து சென்ற ஆட்டோ மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், மாநில அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ஏ டி பி கணேசன், மாவட்ட பொருளாளர் ஓம் சக்தி சேகர், கரூர் ஒன்றிய செயலாளர் முனுசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் கரூர் மாரியப்பன், தெற்கு நகர செயலாளர் கோபால், மாவட்ட துணை செயலாளர் கவிதா, தெற்கு நகர துணை செயலாளர் மரியா மேரி,மத்திய நகர துணை செயலாளர் ஜானகி, வார்டு செயலாளர் தனுஷ்கோடி, ராஜு, கரூர் மத்திய நகர பிரதிநிதி பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Tags:    

Similar News