சிவகங்கையில் பத்திரிகையாளர்கள் தபால் வாக்கு அளிப்பு

சிவகங்கையில் முதல் முறையாக பத்திரிக்கையாளர்கள் தபால் வாக்களித்தனர்.

Update: 2024-04-13 16:10 GMT

தபால் வாக்களித்த பத்திரிக்கையாளர்கள்

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில், பணி நிமித்தமாக தனது வாக்கினை செலுத்த இயலாத அரசு ஊழியர்கள், காவலர்களுக்கு தபால் ஓட்டு மூலம் தனது வாக்கினை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாய்ப்பு வழங்கி உள்ளது.

இத்தேர்தலில் பணி நிமித்தமாக வெளியூர்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கும் தபால் ஓட்டு பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் தனியார் தொலைக்காட்சி மூத்த செய்தியாளர் பாங்கரவேலு ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஜனநாயக கடமையை தபால் ஓட்டும் மூலம் நிறைவேற்றினார்.

இதன் மூலம் தபால் வாக்கு பதிவு செய்த செய்தியாளராக இவரது பெயர் இடம்பெற்றது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையத்திற்கு செய்தியாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்

Tags:    

Similar News