வையாபுரியில் கபடி போட்டி!
பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.வெற்றிப்பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 05:13 GMT
கபடி போட்டி
பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 13வது ஆண்டாக கபடி போட்டி நடந்தது. புதுக்கோட்டை,திருச்சி, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசை உலகம் பட்டி அணியினரும், 2ம் பரிசை மின்னல்குடி அணியினரும்,3ம் பரிசை மதியாணி எஸ்.எஸ்.எல்.எப் அணியினரும், நான்காம் பரிசை புதுக்கோட்டை யூஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் பெற்றனர். வெற்றிப்பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.