வாக்குச்சாவடி மையங்களுக்கான  பொருட்கள் அனுப்பி வைத்தல் - கலெக்டர்  பார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி மையங்களுக்கு பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-17 16:11 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், விளவங்கோடு மற்றும் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,இன்று (17.04.2024)  நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்,

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி,         அதன் ஒருபகுதியாக  வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பைகளில் அடைத்து மண்டல அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் பணியினை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியினை விரைந்து முடிந்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.  இந்நிகழ்ச்சிகளில் உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத்பீட்டன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கம்,  உதவி தேர்தல் அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News