கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் இளைஞர்களுடன் கலந்துரையாடல்

நூலகத்தில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பி.பரிதாநவாப் இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

Update: 2024-06-29 16:28 GMT

மாணவர்களுடன் கலந்துரையாடிய நகர்மன்ற தலைவர்

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பழையபேட்டை பேருந்து நிலையம் அருகில் நூலகம் மற்றும் அறிவுசார்ந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் போட்டி தேர்வுக்கான அனைத்து துறை புத்தகங்களும் உள்ளன.நூலகத்தைச் சுற்றி சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில், நூலகம் கிருஷ்ணகிரி நகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ளது.

மேலும்,இந்த நூலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு நிகழ்ச்சியாக, ஒரு சிறந்த தலைப்பின் கீழ் தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், தலைவர்களின் கலந்துரையாடல் நடைபெறுவது வழக்கம். இன்று (29/06/2024) இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராகக் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பி.பரிதாநவாப் கலந்து கொண்டு துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

  இதில், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர், துப்புரவு செயற்பொறியாளர், நகராட்சி நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News