அமராவதி ஆற்று பாலம் அருகே ஆண் சடலம் மீட்பு: காவல்துறை வழக்கு பதிவு

அமராவதி ஆற்று பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டுள்ளது

Update: 2024-05-09 13:37 GMT

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

 கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஐந்து ரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழே, அடையாளம் தெரியாத 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக,

அப்பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள சணப்பிரட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்தில் வந்து ஆண் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை உறுதி செய்த விஏஓ செந்தில் குமார், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உடல் சிதைந்த நிலையில் இருந்த அடையாளம் தெரியாத அந்த ஆண் உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது பெயர்? போன்ற விபரங்களை விசாரணை செய்து வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News