மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

Update: 2023-12-07 05:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 54 மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3ம் தேதி அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமை களைப் பாதுகாத்து அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை மாற்றுத்திறனாளிகள் வாரமாக கொண்டாடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் படி இன்று மாற்றுத்திறனாளி களுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 54 மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
Tags:    

Similar News