மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னரை பயன்படுத்தி அரசு திட்டங்களை முடக்கி வைப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-09 01:30 GMT

ஆர்ப்பாட்டம் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட குழு சார்பில் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில உரிமைகளை பறிக்கும் மற்றும் கவர்னரை பயன்படுத்தி அரசு திட்டங்களை முடக்கி வைக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News