அமைச்சர் ஆய்வு

திருநெல்வேலியில் கனமழையால் சேதமடைந்த மேலநத்தம் பாலத்தின் சீரமைப்பு பணிகளை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு பார்வையிட்டார்.

Update: 2023-12-25 16:07 GMT

 திருநெல்வேலியில் கனமழையால் சேதமடைந்த மேலநத்தம் பாலத்தின் சீரமைப்பு பணிகளை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் மேலநத்தம் பாலம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த இந்த பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை முன்னிட்டு இன்று 25/12/23 நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்,நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News