நாகர்கோவில் அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவில் அருகே மாயமான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-09 11:31 GMT
பெண் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் பகுதி வல்லன் குமாரவிளை மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (39). இவர் லேத் வொர்க் ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி கலைவாணி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களாகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ தினம் வேலைக்கு சென்று விட்டு கண்ணன் வீட்டுக்கு வந்த போது மனைவி கலைவாணியை காணவில்லை.

அக்கம் பக்கத்தில் விசாரித்தும், உறவினர்களை தொடர்பு கொண்ட போதும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து கண்ணன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கலைவாணி தேடி வருகிறார்கள். குடும்பப் பிரச்சனை ஏதாவது இருந்து கலைவாணி மாயமானாரா? அல்லது அவர் மாயமானதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உண்டா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News