வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்.பி

வடசென்னை மக்களவை தொகுதியில் பல் நோக்கு கட்டிடம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு மைதான கட்டுமான பணிகளை எம்.பி கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-03-14 01:22 GMT

எம்.பி கலாநிதி வீராசாமி

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள சென்னை துறைமுகம் நிறுவனத்திடமிருந்து (CSR) சமூக பொறுப்பு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டம் மூலமாக பெற்ற நிதியையும் இணைத்து ரூபாய் 2 கோடி பெற்று ஆர்.கே. நகரில் உள்ள அன்னை சத்யா நகர் மெயின் தெருவில், பல் நோக்கு கட்டிடம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு ஷட்டில் கோர்ட் கட்டுமான பணிகளுக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் மற்றும் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபினேசர் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News