தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் 3 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-09-27 06:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் 3 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி காமராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் சிவரஞ்சனி (21), இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார். இதுபோல், தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மனைவி அபர்ணா (33), இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் பவித்ரா (22), இவர் கடந்த 25ஆம் தேதி காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News