ஈரோடு மாவட்டத்தில் போதை அளிக்கக் கூடிய கள் இறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அம்மாபேட்டை அடுத்த கருக்கன்னிகரட்டு பகுதியில் கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் கள் இறக்குவது தெரியவந்தது. இதனையடுத்து, கள் இறக்கிய அதேப் பகுதியைச் சேர்ந்த முனியப்பா (43) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இறந்த 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.