கைது

Update: 2025-03-25 02:51 GMT
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம், சித்தோடு மற்றும் ஆசனூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர் அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (43), ராம நாதபுடம் மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த ரவி (49), திருப்பூர் மாவட்டம், செவந்தாம்பாளையத்தை சேர்ந்த விவேக் (32) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News