சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல கோவில் நிர்வாகம் உகந்த நேரத்தை அறிவித்துள்ளது.

Update: 2024-04-21 15:49 GMT

திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 23-ந் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 23-ந் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News