ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழா இன்று தொடக்கம்

அனைவரும் ஆட்சிமொழி சட்ட வாரத்தில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்;

Update: 2023-12-18 07:55 GMT

ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழா இன்று தொடக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தருமபுரி மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா டிச. 18-ஆம் தேதி தொடங்கி வருகிற டிச.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்சிமொழி தமிழ் சட்டம் நிறைவேற்றப்பட்டதை போற்றும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் டிச.18 முதல் டிச. 27 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா நடைபெற உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வான கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின் காட்சி உரை,ஆட்சி மொழி வரலாறு சட்டம், தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் அமைய வலியுறுத்தி வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சி மொழித் திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு வாரியங்கள்,கழகங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அமைப்புகள் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News