மஞ்சகுடியில் பாம்பு கடித்து முதியவர் பலி

குடவாசல் அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-01-08 08:31 GMT

பைல் படம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு இவரது தந்தை தங்கராசு  65 . இவர் வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக நல்ல பாம்பு தங்கராசுவை கடித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த தங்கராசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News