பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

பாம்பு கடித்து சிகிச்சை எடுத்து வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Update: 2024-06-28 16:10 GMT

பாம்பு கடித்து பலி

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த டி.சி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள்(60). கணவரை இழந்த இவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இவர் அதேப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரை பாம்பு கடித்துள்ளது.

இதனால் வலியால் துடித்த அவர் இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News