குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2024-06-11 16:01 GMT

கோப்பு படம்

களியக்காவிளை அருகே. குழிவிளை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்.தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நேற்று மது அருந்தி விட்டு வீட்டின் அருகில் உள்ள பறம்புக்கோடு குளத்தின் படுத்துள்ளார். கலுங்கில் அப்போது அவர் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து மூழ்கினார். இது குறித்து அறிந்த அப்பகுதியினர்குழித்துறை தீயணைப்பு துறையினருக்கும், களியக்கா விளை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி வெங்க டேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும் இரவுநேரமாகியதால் தேடும் பணியை நிறுத்திவிட்டனர்.இந்நிலையில் இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள்  வெங்கடேசன். உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News