சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-12-19 12:58 GMT

காவல் நிலையம் 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர் பிரிவு சாலையில் விராலிமலை மந்தாகினி பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாலாஜி வயது 21 இவர் விராலிமலை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் வயது 23 என்பவருக்கு சொந்தமான டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது பின்புறமாக அதிவேகமாக வந்து மோதியுள்ளார்.

இதில் பாலாஜி படுகாயம் அடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலாஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து டாட்டா ஏஸ் வாகன உரிமையாளர் கிருஷ்ண பிரசாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News