டூவீலர் மோதி வெளிமாநில தொழிலாளி பலி

சேலம் மாவட்டம், வீரனூர் அருகே வேலை முடிந்து திரும்பிய வெளிமாநில தொழிலாளர் இருசக்கர வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-08 07:36 GMT
1
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள், தனியாக வீடு எடுத்து வசித்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்களமாநிலத்தைச் சேர்ந்த சுருஜித்கோர்ஸ் (28). இவர் 31-ம் தேதி புனல்வாசல் பகுதியில், கட்டிட வேலையை முடித்துவிட்டு டூவீலரில், வீட்டிற்கு அவரது நண்பருடன் வந்து சென்றுகொண்டிருந்தனர். வீரகனூர் பேரூராட்சி அலுவலகம் முன் சிறியபாலம் பக்கம் வந்த போது, எதிர்பாராமல் டூவீலர் மோதி சுருஜித்கோர்ஸ் பள்ளத்தில் விழுந்தார். பலத்தகாயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இதுகுறித்து வீரகனூர் எஸ்ஐ சிவகுருநாதன் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடலை உறவினரிடம் ஒப்படைத்தார்.
Tags:    

Similar News