சக்கம்மாள்புரத்தில் பகுதிநேர ரேஷன் கடை : நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சக்கம்மாள்புரத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள எம்.எல்.ஏ சண்முகய்யா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Update: 2024-06-30 09:30 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சக்கம்மாளபுரம் பகுதி மக்கள் 2 கிமீ தூரம் நடந்து சென்று ரேஷன் பொருள்கள் வாங்க செல்கின்றனர். எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை சண்முகையா எம்எல்ஏ உணவுத் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். இதையடுத்து பகுதி நேர கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்துவரும் சண்முகையா எம்எல்ஏ, பரிந்துரை செய்த மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளரும் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, வார்டு உறுப்பினர் குணபாலன், திமுக கிளை செயலாளர் சுகுமார், நாராயணண் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தனது நிதியில் இந்த நியாய விலைகடை கட்டடத்தை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News