வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி அவிநாசி, சேவூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-21 01:39 GMT

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், அவிநாசி- சேவூர் ரோடு, சூளை அருகே பட்டறை பேருந்து நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் செம்பியநல்லூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.மேட்டுப்பாளையம், செம்பாகவுண்டன்பாளையம், முத்தம்மாள் நகர், விஷ்ணு கார்டன், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டறை பஸ் நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கடந்த 18ம் தேதி செம்பகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டப்பன் 77, சைக்கிளில் பட்டறை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அவிநாசி செங்காட்டு திடல் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த டூ வீலர் கிட்டப்பன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் நெஞ்சில் பலத்த காயமடைந்தார். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒவ்வாரு மாதத்தில் பதினைத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் அதில் உயிரிழப்புகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். இதனை தடுக்க வேகத்தடை அமைத்து தரக் கோரி பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கும், அவிநாசி போலீசாருக்கும் மனு அளித்திருந்தும் நடவடிக்கை எடுக்காததால் வேகத்தடை அமைத்து தர கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறினர். இதனையடுத்து தகவல் அறிந்த அவிநாசி காவல் ஆய்வாளர் ராஜவேல், போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாள் கால அவகாசத்திற்குள் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அவிநாசி சேவூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News