பெருமாள் கோவில் பிரகாரத்தில் கூல் பெயின்ட் அடிக்கணும்!

திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரகாரத்தில் ‘கூல்பெயின்ட்' அடிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-10 12:36 GMT

திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரகாரத்தில் ‘கூல்பெயின்ட்' அடிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சுடுதரையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பக்தர்களின் பாதங்கள் சுடாமல் இருக்க, பிரகார தரையில் ஏற்கனவே பூசப்பட்ட கூல் பெயிண்டு பூச்சுகள் ஆங்காங்கே உதிர்ந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே,கோவில் நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கோவில் பிரகாரத்தில் ‘கூல் பெயிண்டு’ அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News