நெய்வேலியில் பாமக அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம்,நெய்வேலி என்எல்சி பட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பாமக ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-25 08:22 GMT

பாமக ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி என். எல். சி. பாட்டாளி தொழிற்சங்கம் அலுவலகத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருகின்ற 26. 02. 2024 அன்று வடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேருரை ஆற்ற இருக்கின்ற, பாமக கொள்கை விளக்க பொதுக்கூட்டத்திற்கு, கடலூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் அமையுள்ள வள்ளலார் பன்னாட்டு மையத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனைக்கினங்க மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Tags:    

Similar News