ராமநாதபுரத்தில் மின் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சட்ட விரோத மின் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டும் மின்சார வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-03-02 09:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ளது பெரியகுளம் ஊராட்சி. இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை டென்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் கம்பி மற்றும் மரங்களை வெட்டுவதற்கு மின் கம்பத்தின் கம்பியில் கொக்கி போட்டு மின்சாரத்தை பயன்படுத்துவது சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சாயல்குடி துணை மின் பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News