சேலத்தில் தனியார் பஸ் மோதி என்ஜினீயர் பலி

காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-20 06:08 GMT

சேலத்தில் தனியார் பஸ் மோதி என்ஜினீயர் பலி

சேலம் அருகே டேனீஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 36). சிவில் என்ஜினீயரான இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராம்குமார் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் உடையாபட்டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News