அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆரணியில் அண்ணா சாலை அருகில் தி,மலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-01 10:57 GMT

கண்டன ஆர்ப்பாட்டம் 

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக  அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர் சேவூர்.S.இராமச்சந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போளூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் L.ஜெயசுதா லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் தி,மலை மத்திய மாவட்ட கழக, நிர்வாகிகள் போளூர் சட்டமன்ற கழக நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூராட்சி கழக செயலாளர்கள் நிர்வாகிகள் சார்பு அணி வட்ட கிளைக் கழக நிர்வாகிகள் ஒன்றிய குழு நகர பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் ஐ டி விங் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள்,கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News