மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு 407 விலையில்லா சைக்கிள்களை மேயர் வழங்கினார்

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

Update: 2023-12-13 15:16 GMT

சைக்கிள் வழங்கல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா.நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈ.வெராமாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிதாசனார் மேல்நிலைப் பள்ளி, சுந்தரராஜபுரம் மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி, சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 2376 மாணவ,

மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஈ.வெரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 407 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் இன்று வழங்கினார்கள்.இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி,கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார்,சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான், ஆசிரியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News