மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-07-03 05:03 GMT

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் தினேஷ்குமார், ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி திருத்தம் தொடர்பாக 29 மனுக்களும், சொத்துவரி பெயர்மாற்றம் தொடர்பாக 25 மனுக்களும், புதிய வரிவிதிப்பு வேண்டி 4 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு தொடர்பாக 43 மனுக்களும், நகரமைப்பு தொடர்பாக 14 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 22 மனுக்களும், காலிமனை வரிவிதிப்பு வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 8 மனுக்களும் என மொத்தம் 146 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயரால் நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில் துணை மேயர்.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் சரவணன், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News