வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு - ஒரு மாணவர் உயிரிழப்பு.

வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு - ஒரு மாணவர் உயிரிழப்பு.

Update: 2024-08-23 16:52 GMT

வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு - ஒரு மாணவர் உயிரிழப்பு.

நாமக்கல் மாவட்டம் வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். இந்த சண்டையில் ஆகாஷ் என்ற மாணவருக்கு தலையில் அடிபட்டதில் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்த எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News