வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-05-22 15:19 GMT
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வீடியோ கேமராக்கள் முறையாக இயங்குவதை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி பார்வையிட்டார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் (Strong Room) பாதுகாப்பையும் பார்வையிட்டு பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்கள்.