கிணற்றில் பெண் சடலம் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிணற்றில் கிடந்த பெண் சடலம் மீட்கப்பட்ட் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-27 06:00 GMT
ஆண் சடலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சம்புராயநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக களம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.