மதுரை பேருந்து நிலையத்தில் இருந்த முதியவரை மீட்ட ரெட்கிராஸ்

மதுரை அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் திட்டியதால் வெளியேறி பேருந்து நிலையத்தில் படுத்துக்கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்த ரெட்கிராஸ் அமைப்பினர்.

Update: 2024-07-04 16:35 GMT

கைவிடப்பட்ட முதியவர்

 மதுரை விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காட்டுமாரி. இவர் குடும்பத்தினர் ஆதரவின்றி தனியாக சமையல் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் காட்டுமாரியை அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் கவனிக்க ஆளின்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது படுக்கையில் இருந்து எழ முடியாமல் உடல்உபாதைகளை கழித்ததால் அங்கிருந்த ஊழியர்கள் காட்டுமாரியை கடுமையாக திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த காட்டுமாரி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் படுத்துக்கிடந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த முதியவரை ரெட்கிராஸ் அமைப்பினர் மீட்டு மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

Similar News